sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

/

செங்கை அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

செங்கை அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

செங்கை அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு


ADDED : நவ 10, 2025 01:04 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் பழைய ஜி.எஸ்.டி., சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது.

இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகள் 1700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

இந்த மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு இடங்களில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை இருக்கைகளை நாய்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.

ரத்த காயங்களுடன் வரும் நோயாளிகளை பார்க்கும் நாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே நாய்களை பிடிக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us