/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடையில் குடிநீர் வசதி அவசியம்
/
பயணியர் நிழற்குடையில் குடிநீர் வசதி அவசியம்
ADDED : செப் 23, 2024 06:10 AM
செங்கல்பட்டு : அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பகுதி பயணியர் நிழற்குடையில், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு, தினமும் புறநோயாளிகளாக 3,000த்துக்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர்.
இவர்கள் வசதிக்காக, மருத்துவமனை பகுதியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்திற்காக நீண்டநேரம் காத்திருந்து, பயணம் செய்கின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், பொதுமக்கள், புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடை பகுதியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.