ADDED : ஜன 05, 2025 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42. வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.