ADDED : பிப் 05, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்:மேற்கு தாம்பரம், டி.டி.கே., நகரை சேர்ந்தவர் பத்மநாபன், 77. ஓய்வு பெற்ற மின் ஊழியர். நேற்று மதியம், தாம்பரம்- முடிச்சூர் சாலையில், டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., பைக்கில் சென்றார்.
சுண்ணாம்பு கால்வாய் அருகே சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த பத்மநாபன், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுனர் போரூரை சேர்ந்த வேலாயுதம், 52, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.