/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பையனுாரில் வரும் 27ல் வேலைவாய்ப்பு முகாம்
/
பையனுாரில் வரும் 27ல் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 24, 2025 08:31 PM
செங்கல்பட்டு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 27ம் தேதி, பையனுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 27ம் தேதி, மாமல்லபுரம் அடுத்த பையனுாரில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
பையனுாரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. 5,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரை பங்கேற்கலாம். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், சுய விபர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப் படத்துடன் வர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044-27426020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.