ADDED : செப் 26, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நாளை காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.
அதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.