/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : அக் 23, 2024 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு கலெக்டர் அலுலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.