/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்
/
மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்
மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்
மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்
ADDED : ஜூன் 21, 2025 10:07 PM
தாம்பரம்:வேலுார் மாவட்டம், நாதவனுார் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 23. இவருக்கு திருமணமாகி, பவித்ரா என்ற மனைவியும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
மேற்கு தாம்பரம், புலிகொரடு, கன்னடப்பாளையத்தில் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் சூர்யா தங்கி, பிரபல உணவு வினியோக நிறுவனமான, 'ஷொமேட்டோ'வில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு வினியோகம் செய்வதற்காக, மேற்கு தாம்பரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மேற்கு தாம்பரம், போக்குவத்து காவல் உதவி மையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க காத்திருந்தார்.
அப்போது, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தில், தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு மின் கம்பம், கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது.
இதில், படுகாயமடைந்த சூர்யாவை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, ஆபத்தான நிலையில், சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.