sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்

/

காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்

காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்

காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்


ADDED : ஜூன் 22, 2025 10:46 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை, பெருங்களத்துார் -- செட்டிபுண்ணியம் வரை, எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.

சாலை அகலப்படுத்தப்பட்டது முதல், பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாமல், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.

இதற்கு தீர்வாக, உயர்மட்ட நடை பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்கள் கோரிக்கைகளை ஏற்று, ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், தைலாவரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இரும்பாலானா, உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பேருந்து நிறுத்தம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று காலை, 61 மீட்டர் நீளம், 60 டன் எடை கொண்ட இரும்பு பாலம், இரண்டு ராட்சத 'கிரேன்' உதவியுடன் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.

இதற்காக, காட்டாங்கொளத்துார் பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், காட்டாங்கொளத்துார் ரயில்வே கேட் மூடப்பட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us