நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வீராணம் வளாக சந்திப்பு பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, திருக்கழுக்குன்றம், ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த சையது அப்துல் ரகுமான், 23, என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.