sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கூடலுார் காட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

/

 கூடலுார் காட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

 கூடலுார் காட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

 கூடலுார் காட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு


ADDED : நவ 24, 2025 03:00 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கூடலுார் காடு, ஏரிக்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் நகராட்சி கூடலுார் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்குள்ள கூடலுார் - கோவிந்தாபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையை கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சமீப காலமாக, அதிக அளவில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கூடலுார் ஏரிக்கரை மற்றும் சுற்றுப் பகுதியில் இறைச்சிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், குப்பை உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

அருகில் உள்ள வனப்பகுதியிலும் குப்பை கொட்டப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us