sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

/

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : செப் 12, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:பள்ளத்தண்டலம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா,கோலாகலமாக நடந்தது.

திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய பள்ளத்தண்டலம் கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

முன்னதாக, கடந்த 9ம் தேதி, விநாயகர் வழிபாடுடன் விழா துவங்கியது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், இரவு மூன்றாம் கால பூஜைகளும் நடந்தன.

தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு நான்காம் காலை பூஜையும், 9:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடந்தன.

அதைதொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில், 'ட்ரோன்' மூலமாக பூக்கள் மற்றும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து மஹா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

அச்சிறுபாக்கம் மதுராந்தகம் அருகே செம்பூண்டி கிராமத்தில், தண்டு மாரியம்மன் கோவிலில், புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.

செம்பூண்டி கிராமத்தில் உள்ள பழமையான தண்டுமாரியம்மன், சீனிவாச பெருமாள், கெங்கையம்மன், கன்னியம்மன், ஆஞ்சநேயர் கோவில் என, ஐந்து கோவில்களில் திருப்பணிகள் நடந்தன.

இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது.

நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, கோ பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.

பின், இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.

நேற்று, நான்காம் காலத்தில், காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, பின், 9:15 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 10:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இன்று முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறும்.






      Dinamalar
      Follow us