ADDED : அக் 12, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரைச் சேர்ந்த சேசுராஜ் மகன் செல்வராஜேஷ், 44. வாயலுார் சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, அவரது கடையில் ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்டவை இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.