sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று முதல் பணிகள் துவக்கம்

/

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று முதல் பணிகள் துவக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று முதல் பணிகள் துவக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று முதல் பணிகள் துவக்கம்


ADDED : பிப் 09, 2025 09:11 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள், இன்று முதல் துவங்கி நடைபெற உள்ளன.

ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.

இதுகுறித்து, மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் கூறியதாவது:

விவசாயிகள் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் நேர விரயும், பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவை ஏற்படாமல் இருக்க விவசாயிகளின் நலன் கருதி, அடையாளம் எண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுராந்தகம் தாலுகாவில் இதற்கான பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.

அனைத்து ஊராட்சி அலுவலகம், இ- - சேவை மையங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி, வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.

விவசாயிகள் தங்களது ஆதார் எண், சுய விபரங்கள், பட்டா, சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் எண், ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்று தெரிவிக்கலாம்.

முகாம் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு, மதுராந்தகம் மற்றும் புக்கத்துறை வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயனடையலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us