/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைவினை பொருட்கள் விற்பனை கல்பாக்கத்தில் கண்காட்சி துவக்கம்
/
கைவினை பொருட்கள் விற்பனை கல்பாக்கத்தில் கண்காட்சி துவக்கம்
கைவினை பொருட்கள் விற்பனை கல்பாக்கத்தில் கண்காட்சி துவக்கம்
கைவினை பொருட்கள் விற்பனை கல்பாக்கத்தில் கண்காட்சி துவக்கம்
ADDED : செப் 20, 2024 12:13 AM

கல்பாக்கம்:தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ், பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம், மாமல்லபுரத்தில் இயங்குகிறது.
அதன் விற்பனை சந்தை கருதி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்பாக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டது. சில ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சி, கல்பாக்கம் பெண்கள் விடுதியில் நேற்று துவக்கப்பட்டது. பாவினி முன்மாதிரி வேக ஈனுலை நிலைய இயக்குனர் தினேஷ் துவக்கி வைத்தார். பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் நிலைய நிர்வாகி வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் 29ம் தேதி வரை, தினசரி காலை 10:00 மணி முதல், இரவு 9:00 வரை நடக்கும் கண்காட்சியில், பல்வேறு வகை கைவினைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உலோக சிலைகள், வண்ண ஓவியங்கள், செயற்கை கல் ஆபரணங்கள், கைத்தறி ஆடைகள், அணிகலன்கள், பூஜை பொருட்கள், கல், களிமண், காகிதக்கூழ் பொம்மைகள், கொலு பொம்மைகள், மதுரை சுங்கிடி புடவைகளும் இவற்றில் அடக்கம்.
அவற்றுடன், ராஜஸ்தான் கைத்தறி தயாரிப்புகள், கோரைப்பாய் உள்ளிட்ட, 50 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீத தள்ளுபடி அளிப்பதாகவும், கடன் அட்டைகளை சேவை கட்டணமின்றி ஏற்பதாகவும், நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.