sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிமென்ட் சாலை அமைக்க கடப்பேரியில் வலியுறுத்தல்

/

சிமென்ட் சாலை அமைக்க கடப்பேரியில் வலியுறுத்தல்

சிமென்ட் சாலை அமைக்க கடப்பேரியில் வலியுறுத்தல்

சிமென்ட் சாலை அமைக்க கடப்பேரியில் வலியுறுத்தல்


ADDED : செப் 23, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 19வது வார்டு, கடப்பேரி பகுதியில், குருக்கள் தெரு உள்ளது. கடந்த, 2011ல், குருக்கள் தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டது.

இந்த சிமென்ட் சாலை, மதுராந்தகம் தீயணைப்பு நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் மிக முக்கிய சாலையாகும்.

இச்சாலையை, பகுதி குடியிருப்புவாசிகள், ரயில் நிலையத்திற்கு செல்லும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள், அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, சில மாதங்களாக, சிமென்ட் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், அவசர காலத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்வதில் சிரமமாக உள்ளது.

சாலை அமைத்து, 13 ஆண்டுகள் கடந்த பின்னும், தற்போது வரை புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை.

எனவே, நகராட்சி அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, புதிதாக சிமென்ட் சாலை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us