/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளம்பெண் தற்கொலை வாலிபரிடம் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை வாலிபரிடம் விசாரணை
ADDED : ஜூன் 28, 2025 10:16 PM
மறைமலை நகர்:இளம் பெண் தற்கொலை செய்தது குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் குமார், 33.மறைமலை நகரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்த கனிமொழி, 22 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக அஜித்குமார் கூறியதையடுத்து இருவரும் காட்டாங்கொளத்துாரில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அஜித் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது கனிமொழிக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கனிமொழி கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். தொழிற்சாலையில் மயக்கமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனிமொழி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மறைமலை நகர் போலீசார் தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.