sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

/

கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 19, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 19, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூரில், புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான கந்தசுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளில் கிணறு, 'போர்வெல்' ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதிலும், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து குளத்தில் நீராடி, கந்த பெருமானை வழிபட்டு செல்கின்றனர். குளத்தின் கிழக்கு பகுதியிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், குளத்தின் மேற்கு பகுதி, தெற்கு பகுதி, வடக்கு ஒரு பகுதியில், பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீரில் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.

எனவே, குளத்தில் விடுபட்ட பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us