/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி மிரட்டி பணம், மொபைல் ஆட்டை
/
கத்தியை காட்டி மிரட்டி பணம், மொபைல் ஆட்டை
ADDED : செப் 25, 2024 06:00 AM
மதுராந்தகம், : படாளம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ், 20. அவரது நண்பர் சிவா, 22.
இருவரும், நேற்று முன்தினம் இரவு, மாமண்டூர் அருகே தனியார் உணவகத்தில் உணவு பார்சல் வாங்கி, பழையனுார்டீச்சர் நகர் அருகே,சாப்பிட்டு கொண்டுஇருந்தனர்.
அப்போது, பதிவு எண் இல்லாத இருசக்கரவாகனத்தில் வந்த அடையாளம்தெரியாத இரண்டு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் மற்றும் சந்தோஷ், சிவா வைத்திருந்த, தலா 15,000 ரூபாய் மதிப்புள்ளவிவோ மற்றும் ரெட்மி மொபைல் போன்களை பறித்துக் கொண்டுதப்பினர்.
இது குறித்து, சந்தோஷ் அளித்த புகாரின்படி,படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.