sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்லுாரி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

/

கல்லுாரி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

கல்லுாரி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

கல்லுாரி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி


ADDED : ஜன 04, 2025 01:04 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கிணார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கர்,50; கூலித்தொழிலாளி.

இவர் நேற்று காலை, தன் 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' ஸ்கூட்டரில், ஹெல்மெட் அணிந்து, கூடுவாஞ்சேரிக்கு பணிக்கு சென்றார். திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மகேந்திரா சிட்டி பேருந்து நிலையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியார் கல்லுாரி பேருந்து, சங்கரின் ஸ்கூட்டரில் மோதி, அவரது தலையில் ஏறி இறங்கியது.

இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சங்கரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us