sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்

/

செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்

செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்

செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்


ADDED : நவ 14, 2024 09:44 PM

Google News

ADDED : நவ 14, 2024 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ், 70 டாஸ்மாக் கடைகளும், காஞ்சிபுரம் வடக்கு நிர்வாகத்தின் கீழ் 63 கடைகளும் என, மொத்தம் 133 கடைகள் உள்ளன.

டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, கடந்த நான்கு ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.

மது பானங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் போது, ஊழியர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

இச்சம்பவங்களை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்வோருக்கு, ஆன்லைன் பில் வழங்கவும், ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசு முடிவெடுத்தது.

அதன்பின், டாஸ்மாக் கடைகளில், இன்று முதல், வாங்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் கீயூஆர் கோடு வாயிலாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்பணியில், மூன்று முதுநிலை பொறியாளர்கள், 13 ஒருங்கிணைப்பு பொறியாளர்கள், 130 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us