/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 22, 2025 12:20 AM

செங்கல்பட்டு,சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தாக்குதல் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமி, கடந்த 2019 ஏப்., 25ம் தேதி, தெருவில் விளையாடினார்.
அப்போது, காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் பகுதியைச் சேர்ந்த முருகன், 39, என்பவர், தன் வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், ஓராண்டு மெய்க்காவல் தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.
அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முருகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.