/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உங்களை தேடி; உங்கள் ஊரில் தாம்பரத்தில் இன்று முகாம்
/
உங்களை தேடி; உங்கள் ஊரில் தாம்பரத்தில் இன்று முகாம்
உங்களை தேடி; உங்கள் ஊரில் தாம்பரத்தில் இன்று முகாம்
உங்களை தேடி; உங்கள் ஊரில் தாம்பரத்தில் இன்று முகாம்
ADDED : நவ 26, 2024 07:26 PM
செங்கல்பட்டு:தாம்பரத்தில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம், இன்று நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், தாம்பரம் தாலுகாவில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில், இன்று ஆய்வு செய்கின்றனர்.
அதன்பின், மாநகராட்சி அலுவலகத்தில், கலெக்டரிடம் மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.