sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாழ்வாக செல்லும் மின்கம்பி பூண்டியில் விவசாயிகள் பீதி

/

தாழ்வாக செல்லும் மின்கம்பி பூண்டியில் விவசாயிகள் பீதி

தாழ்வாக செல்லும் மின்கம்பி பூண்டியில் விவசாயிகள் பீதி

தாழ்வாக செல்லும் மின்கம்பி பூண்டியில் விவசாயிகள் பீதி


ADDED : ஜன 28, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, விளை நிலங்களின் மீது தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

இப்பகுதி விளை நிலங்களின் வழியே செல்லும் மின்கம்பிகள், கையால் எட்டி தொடும் அளவிற்கு தாழ்வாகச் செல்கின்றன.

இதனால், விளை நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், அச்சத்தில் உள்ளனர்.

பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் உரசி அறுந்து விழும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பீதியடைகின்றனர்.

எனவே, விளை நிலங்களின் மீது தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க, மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us