/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது கோவில் குளத்தில் தவறி விழுந்தவர் பலி
/
பொது கோவில் குளத்தில் தவறி விழுந்தவர் பலி
ADDED : ஏப் 08, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம், மதுராந்தகம் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 38.
இவர் நேற்று, திருவெண்காட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள குளத்தில் தவறி விழுந்த இவரை,
நீண்ட நேரமாக ஊர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர், தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின், இறந்த நிலையில் வினோத்குமாரின் உடலை, தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், வினோத்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.