sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடி விழுந்து காயமடைந்த மகனை பார்க்க ஸ்கூட்டரில் சென்ற தாய் விபத்தில் படுகாயம்

/

இடி விழுந்து காயமடைந்த மகனை பார்க்க ஸ்கூட்டரில் சென்ற தாய் விபத்தில் படுகாயம்

இடி விழுந்து காயமடைந்த மகனை பார்க்க ஸ்கூட்டரில் சென்ற தாய் விபத்தில் படுகாயம்

இடி விழுந்து காயமடைந்த மகனை பார்க்க ஸ்கூட்டரில் சென்ற தாய் விபத்தில் படுகாயம்


ADDED : அக் 13, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 13, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, இடி விழுந்ததில் சிறுவன் காயம்அடைந்தார். பதற்றத்தில் மகனை பார்க்க ஸ்கூட்டியில் சென்ற தாய், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

திருப்போரூர் அடுத்த மயிலை ஊராட்சியில் அடங்கிய எடர்குன்றம் கிராமம், பவானியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகன் ஆகாஷ், கரும்பாக்கம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மழை பெய்த போது, சிறுவன் ஆகாஷ் வீட்டின் அருகே நின்றிருந்தார்.

அப்போது, ஆகாஷ் அருகே இடி விழுந்துள்ளது. இதில், ஆகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இடது கையில் காயமும், வலது காலில் உள் காயமும் ஏற்பட்டது.

அங்கிருந்தோர், அவசர கால 108 ஆம்புலன்ஸ் மூலமாக, சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று, சிறுவன் இரவு வீடு திரும்பினான்.

இந்நிலையில், பதற்றத்தில் இருந்த தாய் சங்கீதா, மகன் ஆகாஷ் வீட்டிற்கு வந்ததை மறந்து, நேற்று அதிகாலை ஸ்கூட்டியில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு தனியாக சென்றுள்ளார்.

அப்போது, செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் தடுமாறி விழுந்ததில், அவருக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென, உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us