sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகர் சிப்காட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

மறைமலைநகர் சிப்காட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலைநகர் சிப்காட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலைநகர் சிப்காட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : ஜூன் 25, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:குண்டும் குழியுமாக உள்ள, மறைமலை நகர் சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வந்து செல்கின்றன.

சிப்காட் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால், வேலை முடித்து இரவில் செல்லும் தொழிலாளர்கள், தடுமாறி வருகின்றனர். எனவே, சாலை நடுவே உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us