/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
/
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : நவ 14, 2025 01:28 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு அருகே, சென்னேரி கிராம சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அனுமந்தபுரம் -- சென்னேரி சாலை 4 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் சென்னேரி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சிதிலமடைந்த இடங்களில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளதால், அவை தற்போது பெயர்ந்து மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் பள்ளி, மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

