sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 புதுப்பட்டினம் சுகாதார மையத்திற்கு ரூ.45 லட்சத்தில் புதிய கட்டடம்

/

 புதுப்பட்டினம் சுகாதார மையத்திற்கு ரூ.45 லட்சத்தில் புதிய கட்டடம்

 புதுப்பட்டினம் சுகாதார மையத்திற்கு ரூ.45 லட்சத்தில் புதிய கட்டடம்

 புதுப்பட்டினம் சுகாதார மையத்திற்கு ரூ.45 லட்சத்தில் புதிய கட்டடம்


ADDED : நவ 14, 2025 01:31 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் துணை சுகாதார மையத்திற்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி, நகர பகுதியாக வளர்ச்சியடைந்து வருகிறது.

அதன் சுற்றுப்புறத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக, துணை சுகாதார மையம் இயங்குகிறது.

இம்மைய கட்டடம் நீண்ட காலத்திற்கு முன்பே பலமிழந்து, படிப்படியாக இடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள வேறோரு குறுகிய கட்டடத்திற்கு, இந்த துணை சுகாதார மையம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

இதனால், பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுமாறு, பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, புதிய கட்டடம் கட்டடப்படுகிறது.

புதிய கட்டடம், கான்கிரீட் அணுகுபாதை உள்ளிட்டவை அமைக்க, மாவட்ட ஊராட்சி, 15வது நிதிக்குழு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இப்பணிகள் நடப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us