sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு

/

புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு

புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு

புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு


ADDED : பிப் 22, 2024 01:14 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கொள்வாய் ஏரி அருகில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான கட்டடத்தில் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இங்கு, இடநெருக்கடி மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், போலீசார் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எனவே, தாலுகா காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு -பொன்விளைந்தகளத்துார் சாலையில் அரசு மருத்துவ கல்லுாரி அருகே, 1 ஏக்கர் பரப்பளவில், 1 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 2022ல் புதிய கட்டடம் கட்டப்பட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம்ஒப்படைக்கப்பட்டது.

இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத், தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்கிட் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர், ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர், வனக்குழு தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us