ADDED : ஜன 20, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எச்சூர் பகுதியில், திருக்கழுக்குன்றம் சாலையில், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்துசென்றார்.
அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.