ADDED : அக் 06, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே, தனியார் பேருந்து மோதியதில், ஒருவர் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து பயணியருடன் சென்னைக்கு தனியார் பேருந்து நேற்று முன்தினம் வந்தது.
தாம்பரம்- - -மதுரவாயல் புறவழிச் சாலையில், குன்றத்துார் அருகே தரப்பாக்கம் பகுதியில் நள்ளிரவு 12:00 மணிக்கு வந்தபோது, சாலையை கடந்த 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த நபர், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் கல்யாணசுந்தரம், 54, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.