sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வெளியூர் ஷேர் ஆட்டோக்கள் மாமல்லையில் இடையூறு

/

வெளியூர் ஷேர் ஆட்டோக்கள் மாமல்லையில் இடையூறு

வெளியூர் ஷேர் ஆட்டோக்கள் மாமல்லையில் இடையூறு

வெளியூர் ஷேர் ஆட்டோக்கள் மாமல்லையில் இடையூறு


ADDED : டிச 29, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில், பிப்., மாதம் தைப்பூச உற்சவம் நடக்கவுள்ளது. இவ்வழிபாட்டிற்காக, தமிழக மேற்கு மாவட்டங்கள், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநில பக்தர்கள் திரள்கின்றனர். வெளிமாநில பக்தர்கள், மாமல்லபுரம் கடலில் நீராடுவதற்காக, ஆயிரக்கணக்கானோர் தினசரி படையெடுக்கின்றனர்.

அவர்களின் சவாரிக்காக, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட வெளியூர் ஷேர் ஆட்டோக்கள், அதிகளவில் குவிகின்றன. ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில், அர்ஜூன் சிற்ப பகுதி ஆகிய இடங்களில் முகாமிடுகின்றன. அவற்றின் ஓட்டுனர்கள், ஆட்டோக்களை சாலையை அடைத்து நிறுத்தி, பயணியரை ஏற்றி இறக்குகின்றனர். வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணியர் எண்ணிக்கையைவிட, அதிக பயணியரை அடைத்துச் செல்கின்றனர்.

அதிக நடை சவாரி செல்வதற்காக, போட்டி போட்டு, ஒன்றை ஒன்று முந்தி, அதிவேகத்தில் விபத்து அபாயத்துடன் ஓட்டுகின்றனர். பஸ் நிறுத்துமிடத்தில் இருந்து, சிற்ப பகுதி, கடற்கரை நீண்டதொலைவில் உள்ளதாக கூறி, பயணியரிடம் குறைந்தபட்சமே தலா 50 ரூபாய் அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஷேர் ஆட்டோக்கள் இயக்கத்தால், கடும் நெரிசல் ஏற்பட்டு, பிற வாகனங்கள் செல்ல இயலாமல், போக்குவரத்து முடங்குகிறது. பாதசாரி பயணியர் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். அவற்றை போலீசார் கட்டுப்படுத்த, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us