/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
/
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
ADDED : நவ 05, 2024 11:32 PM

சித்தாமூர்:சித்தாமூர் பஜார் பகுதியில், பி.டி.ஓ., அலுவலக வளாகம் உள்ளது.
இந்த வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி வள மையம், வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி, நுாலகம், தபால் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அனைவரும் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பராமரிப்பு இன்றி நீண்ட நாட்களாக அகற்றப்படாமல், பி.டி.ஓ., அலுவலகத்தின் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் பெருக்கெடுப்பதால், வட்டார கல்வி வள மையம், வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், வழிந்தோடும் கழிவுநீர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரில் கலப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி பி.டி.ஓ., அலுவலக கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்து, சாலையில் பெருக்கெடுப்பதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நிரம்பி வழியும் பி.டி.ஓ., அலுவலக கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.