sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பணிமனையில் 'டீசல் பம்ப்' பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி

/

பணிமனையில் 'டீசல் பம்ப்' பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி

பணிமனையில் 'டீசல் பம்ப்' பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி

பணிமனையில் 'டீசல் பம்ப்' பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி


ADDED : ஆக 05, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 05, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் உள்ள எரிபொருள் நிரப்பும் 'டீசல் பம்ப்' பழுதடைந்ததால், பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரப் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் உட்பட, 5,000க்கும் மேற்பட்ட பயணியர் இந்த பேருந்து நிலையத்தை பயன் படுத்தி வருகின்றனர்.

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.

இங்கு, விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட சில புறநகர் பேருந்துகள் மற்றும் மதுராந்தகம் பணிமனைக்கு உட்பட்ட பேருந்துகள் என, 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன.

கடந்த ஐந்து நாட்களாக, இந்த எரிபொருள் நிரப்பும் டீசல் பம்ப் பழுதடைந்து உள்ளது.

இதனால், மேற்கண்ட பேருந்துகள் மாமண்டூர் பகுதிக்குச் சென்று, எரிபொருள் நிரப்பி வருகின்றன.

அதனால், பேருந்துகள் குறித்த நேரத்திற்கு மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை என, பயணியர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், காலையில் பணிக்கு வரும் பேருந்து ஓட்டுநர்கள், முன்னதாகவே சென்று, மாமண்டூரில் எரிபொருள் நிரப்பி வர வேண்டிய சூழல் உள்ளது.

இதனால், பணிச்சுமை ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள், மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சரி செய்ய வேண்டும் என, பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us