/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அஞ்சல் ஹாக்கி தமிழகம் -கர்நாடகா மோதல்
/
அஞ்சல் ஹாக்கி தமிழகம் -கர்நாடகா மோதல்
ADDED : பிப் 16, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய அஞ்சல் துறையின், 35வது அகில இந்திய அஞ்சல் துறை ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்து வருகிறது.
காலை 9:30 மணிக்கு நடந்த மற்றொரு ஆட்டத்தில், தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
அதில், தமிழக அணி, 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் பரத்ராஜ் சிறந்த ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
அனைத்து லீக் சுற்றுகள் முடிவில், நடப்பு சாம்பியனான கர்நாடகா மற்றும் தமிழக அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிப்போட்டி, இன்று மதியம் 2:00 மணிக்கும், தொடர்ந்து நிறைவு விழா, மாலை 4:00 மணிக்கும் நடக்கிறது.