/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 14, 2025 02:24 AM

மறைமலை நகர்:ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, 25 கி.மீ., உடையது. கடந்த 2014ல், இச்சாலை ஆறுவழி மாநில நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், மழைநீர் தேங்காமல் வெளியேற தடங்கள் அமைக்கப்பட்டன.
இந்த அமைப்புகளில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் அடைத்துள்ளது. நேற்று சிங்கபெருமாள் கோவில், கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மழைநீர் வெளியேறும் தடங்களில் பிளாஸ்டிக் குப்பை அடைத்துள்ளதால், சாலையில் தண்ணீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறினர்.
எனவே, சாலையில் கிடக்கும் குப்பை மற்றும் மணல் திட்டுகளை அகற்றி, மழைநீர் செல்ல வழி செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கு முன், சாலையில் உள்ள பள்ளம் மற்றும் இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி பராமரிக்க, பணியாளர்கள் இருந்தனர். ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப் பட்டது முதல், பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவது இல்லை. மழைநீர் செல்லும் வழித்தடங்களில் மண் மற்றும் குப்பை நிறைந்துள்ளது. இதனால், இந்த சாலையில் சமீப காலமாக விபத்து அதிகரித்துள்ளது. - சி.வேல்முருகன், சிங்கபெருமாள் கோவில்.