sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : செப் 14, 2025 02:24 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, 25 கி.மீ., உடையது. கடந்த 2014ல், இச்சாலை ஆறுவழி மாநில நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.

தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், மழைநீர் தேங்காமல் வெளியேற தடங்கள் அமைக்கப்பட்டன.

இந்த அமைப்புகளில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் அடைத்துள்ளது. நேற்று சிங்கபெருமாள் கோவில், கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மழைநீர் வெளியேறும் தடங்களில் பிளாஸ்டிக் குப்பை அடைத்துள்ளதால், சாலையில் தண்ணீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறினர்.

எனவே, சாலையில் கிடக்கும் குப்பை மற்றும் மணல் திட்டுகளை அகற்றி, மழைநீர் செல்ல வழி செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கு முன், சாலையில் உள்ள பள்ளம் மற்றும் இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி பராமரிக்க, பணியாளர்கள் இருந்தனர். ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப் பட்டது முதல், பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவது இல்லை. மழைநீர் செல்லும் வழித்தடங்களில் மண் மற்றும் குப்பை நிறைந்துள்ளது. இதனால், இந்த சாலையில் சமீப காலமாக விபத்து அதிகரித்துள்ளது. - சி.வேல்முருகன், சிங்கபெருமாள் கோவில்.







      Dinamalar
      Follow us