sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை குறுக்கே செல்லும் மழைநீர்:  விவசாயிகள் அவதி

/

சாலை குறுக்கே செல்லும் மழைநீர்:  விவசாயிகள் அவதி

சாலை குறுக்கே செல்லும் மழைநீர்:  விவசாயிகள் அவதி

சாலை குறுக்கே செல்லும் மழைநீர்:  விவசாயிகள் அவதி


ADDED : அக் 21, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்திலிருந்து பழந்தோப்பு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, வழியாக அப்பகுதி விவசாயிகள் விவசாய பணிக்கு செல்கின்றனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்கின்றனர். கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நீரேற்றும் நிலையத்திற்கு பம்ப் ஆப்பரேட்டர்கள் செல்கின்றனர்.

இச்சாலை குறுக்கே சில மாதங்களுக்கு முன், சிறு பாலம் மட்டும் அமைக்கப்பட்டது. இந்த சிறுபாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் பெரியதாக இல்லாமல் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது.

முறையான கால்வாய் வசதி இல்லை. சாலை மேம்படுத்தாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழைநீர் சாலையைக் கடந்து செல்வதுடன் தேங்கியும் நிற்கிறது.

தேங்கும் மழைநீரில், விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள் என, அனைவரும் தண்ணீரில் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே, மழைநீர் வெளியேறும் வகையில், பெரிய, சிறு பாலம், கால்வாய் வசதி, புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.






      Dinamalar
      Follow us