/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
/
விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
ADDED : அக் 12, 2024 11:02 PM
மறைமலைநகர்,:சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையில், திருக்கச்சூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றின் அருகே இருந்த மொபைல்போன் மற்றும் பர்சை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் நகரைச் சேர்ந்த பழனி மகன் விமல், 37, என்பதும், பி.பி.ஏ., பட்டதாரியான இவர், வேலை கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றது தெரிய வந்தது. விமல் கிணற்றில் குளிக்க வந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.