/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பு வீடுகள் மாங்காடில் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் மாங்காடில் அகற்றம்
ADDED : ஜன 27, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சி லட்சுமிபுரம் சாலையோரம், அரசு நிலத்தை ஆக்கிரமித்து நான்கு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி, வருவாய் துறை மற்றும் மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏற்கனவே 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாங்காடு போலீசார் பாதுகாப்புடன் நேற்று சென்ற வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக நான்கு வீடுகளையும் இடித்து அகற்றினர்.
வீடுகளை இடிக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

