sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை

/

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை


ADDED : ஏப் 16, 2025 07:43 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., --- - இ.சி.ஆர்., சாலையை இணைக்கும் வகையில், முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னைக்கு அருகே வளர்ந்து வரும் புறநகர் பகுதியான முட்டுக்காடு ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

முட்டுக்காடு ஊராட்சி பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை என இரண்டு முக்கிய சாலைகளிலும் உள்ளது.

இவ்வூராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர் ஆகிய கிராமங்களும் உள்ளன.

முட்டுக்காடு ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் போன்றவை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ளது.

இ.சி.ஆர்., சாலையில் இருந்து இந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கோவளம் சென்று, அங்கிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கேளம்பாக்கம் வந்து, கேளம்பாக்கத்தில் இருந்து ஏகாட்டூர் வரவேண்டும் இவ்வாறு 10 கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.

அல்லது இப்பகுதி மக்கள் அக்கரை, சோழிங்கநல்லுார், நாவலுார் வழியாக 20 கி.மீ. துாரம் சுற்றி வர வேண்டும்.

முட்டுக்காட்டில் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் இடையே பாலம் அமைத்தால் 2 கி.மீ., துாரத்தில் செல்லலாம்.

ஒரே ஊராட்சியில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வழி இல்லாததால் மக்கள் சுற்றி சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக இப்பாலம் அமைத்தால் முட்டுக்காடு ஊராட்சி மக்களுக்கும் மட்டும்மல்லாமல், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள மற்ற பகுதி மக்களுக்கும், இ.சி.ஆர்., சாலைக்கு செல்ல உதவியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us