/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
ADDED : ஆக 28, 2025 02:01 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தில் குப்பை மற்றும் மண் திட்டுகள் பரவி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது.
இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
மேலும் ஆப்பூர் திருக்கச்சூர்,கொளத்தூர்,தெள்ளிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில்,தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, 138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில்,மேம்பாலத்தில் உள்ள சாலைகள் மற்றும் ரவுண்டான பகுதிகளில் அதிகளவு குப்பை மண் திட்டுக்கள் பரவி உள்ளதால் மழை பெய்யும் போது மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. பிளாஸ்டிக் குப்பை மண் துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவற்றை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.