sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பராமரிப்பற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

/

பராமரிப்பற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

பராமரிப்பற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

பராமரிப்பற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை


ADDED : செப் 11, 2025 09:37 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலத்தில், பராமரிப்பின்றி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனந்தமங்கலம் ஊராட்சி. இங்குள்ள குளக்கரை பகுதியில் மக்களின் குடிநீர் தேவைக்காக, 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி, குழாய்கள் வாயிலாக கிராமத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி துாண்களின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உறுதித் தன்மை இழந்து உள்ளது.

பராமரிப்பின்றி உள்ளதால், இதிலிருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, கிராமத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, பராமரிப்பின்றி, வலுவிழந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us