/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இறந்த நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
/
இறந்த நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
ADDED : பிப் 04, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு ரயில் நிலையம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துஉள்ளது.
நேற்று, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுபாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.