sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு

/

சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு

சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு

சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 21, 2024 08:06 PM

Google News

ADDED : நவ 21, 2024 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கூவத்துார் பகுதியில் சமுதாயக் கூடம் வசதி இல்லாததால், தென்பட்டினம், அடையாளச்சேரி, கீழார்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போர், கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் மண்டபம் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வரும் கூவத்துார் பஜார் பகுதியில், பல ஆண்டுகளாக சமுதாயக்கூடம் அமைக்க, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

ஆனால், தற்போது வரை அமைக்கப்படாததால், இப்பகுதிவாசிகள் தனியார் மண்டபத்தில் அதிகம் பணம் செலுத்தி, சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பொதுமக்கள் நலன் கருதி, கூவத்துார் பஜார் பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து, அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us