sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.2.48 கோடி மதுராந்தகம் புது பஸ் நிலைய பணி...மந்தம்: பயணியர், கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் தவிப்பு

/

ரூ.2.48 கோடி மதுராந்தகம் புது பஸ் நிலைய பணி...மந்தம்: பயணியர், கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் தவிப்பு

ரூ.2.48 கோடி மதுராந்தகம் புது பஸ் நிலைய பணி...மந்தம்: பயணியர், கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் தவிப்பு

ரூ.2.48 கோடி மதுராந்தகம் புது பஸ் நிலைய பணி...மந்தம்: பயணியர், கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் தவிப்பு


ADDED : ஏப் 03, 2025 07:05 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 07:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், 2.48 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணி, மந்தமாக நடைபெற்று வருகிறது. கூடுதலாக 1.25 கோடி ரூபாய் ஒதுக்கியும் பணி தாமதமாவதால் பயணியர் மற்றும் கடைகள் ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 2.10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், ஒரத்தி, வேடந்தாங்கல், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற நகரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு பணிக்குச் செல்வோர் என, நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பேருந்து நிலையம் நாளடைவில் பழுதடைந்து, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு, பயணியர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. கட்டடங்களும் சேதமடைந்ததால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

* நிதி ஒதுக்கீடு


இதன் காரணமாக, 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலைய கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

மீண்டும் அதே பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள், 2024ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டன.

* வியாபாரிகள் கோரிக்கை:


ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்தில், 40 வியாபாரிகள் பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.

ஆனால், புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தில், 20 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில், கூடுதலாக பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்க வேண்டும் என, மதுராந்தகம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தனர்.

* கூடுதல் நிதி


இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் முதல் தளம் அமைத்து, கூடுதல் கடைகள் அமைப்பதற்காக, கூடுதலாக 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதல் கிடைத்து, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால், கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து, பணிகள் துவங்கப்பட்டன.

ஆனால், ஒப்பந்தக் காலம் முடிந்தும், இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல், மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை, 50 சதவீதம் கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இதனால் பேருந்து பயணியர் மற்றும் கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து, பணிகள் துவங்கப்பட்டன.

ஆனால், ஒப்பந்தக் காலம் முடிந்தும், இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல், மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை, 50 சதவீதம் கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.






      Dinamalar
      Follow us