sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில் தடங்களில் கஞ்சா விற்பனை

/

சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில் தடங்களில் கஞ்சா விற்பனை

சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில் தடங்களில் கஞ்சா விற்பனை

சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில் தடங்களில் கஞ்சா விற்பனை


ADDED : அக் 17, 2024 10:27 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி, திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், விக்னேஷ் கார்டன், பகத்சிங் நகர், டாக்கா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கி, மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில், சமீப காலமாக இளைஞர்களை குறிவைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் துவங்கி, செட்டிப்புண்ணியம் ரயில்வே கேட் வரை, கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

பதின் பருவத்தினரை குறிவைத்து, விற்பனை நடைபெற்று வருவதால், புதிய நபர்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக, இந்த பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

மேலும், ரயில் படிகளில் பயணம் செய்வோரை தடிகளால் தாக்கி, மொபைல் போன்களை பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே, ரயில் தண்டவாளத்தை ஒட்டி உள்ள பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us