sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

/

செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு


ADDED : ஏப் 22, 2025 12:08 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்,

செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல், பத்திரப் பதிவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

செய்யூர் பஜார் வீதியில், மாவட்ட கிளை நுாலகம் அருகே சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வீடு, நிலம் வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் 'செட்டில்மென்ட்' போன்ற 50 முதல் 80 பத்திரங்கள் வரை தினமும் பதிவு செய்யப்படுகின்றன.

இதனால் தினமும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய நேரத்தில் பத்திரப்பதிவிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

எனவே, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், இந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us