sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது

/

பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது

பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது

பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது


ADDED : நவ 03, 2025 10:37 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான், 18.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியிலுள்ள, 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில் குளிக்க, தன் நண்பர்கள் இருவருடன் சென்றார்.

அங்கு குளித்த போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, சைப் அலிக்கான் மாயமானார்.

உடனே அவரது நண்பர்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்த போது, அந்தபகுதியில் இருள் சூழ்ந்தது. இதனால், தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

நேற்று காலை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக, ஆற்றில் பல்வேறு இடங்களில் சைப் அலிக்கானை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று பகல் முழுதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தீயணைப்பு வீரர்கள் இன்றும், சுற்றியுள்ள ஆற்றுப்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.






      Dinamalar
      Follow us