sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய பாடகர் கைது

/

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய பாடகர் கைது

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய பாடகர் கைது

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய பாடகர் கைது


ADDED : நவ 19, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 19, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குருகுகன், 26; பின்னணி பாடகர். தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி மட்டுமின்றி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். இவர் மீது, பரங்கிமலையை சேர்ந்த பெண் மென்பொறியாளர் ஒருவர், பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:

கடந்த மே மாதம், இசை நிகழ்ச்சி ஒன்றில் குருகுகன் அறிமுகமானார். சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பெற்றோரிடம் பேசும்படி கூறினேன்.

என் பெற்றோரை வந்து சந்தித்த குருகுகன், 'உங்கள் மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க மாட்டேன். அவரை திருமணம் செய்து வையுங்கள்' என்றார்.

இதையடுத்து, நாங்கள் காதலர்களாக பழகி வந்தோம். ஒரு நாள் உடல் நலம் சரியில்லாமல், வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். என்னை சந்திக்க வந்த குருகுகன், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்.

பின், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி, என்னை சமாதானம் செய்தார். பின், தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதமாகிறது என, திருமணம் செய்யாமல் தட்டிக்கழித்தார்.

இந்நிலையில், நான் கருவுற்றேன். அதை அவரிடம் கூறியபோது, என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். தற்போது, திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

பரங்கிமலை மகளிர் போலீசார், பாடகர் குருகுகன் மீது, பொய்யான உத்தரவாதம் கொடுத்து, பாலியல் உறவு வைத்துக் கொள்வது; மிரட்டி ஆதாரங்களை அழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவரை விசாரணைக்கு அழைத்தபோது, குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குருகுகன், பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us